19- باب : قول الشيطان : من خلق ربك ؟
பாடம்
19
பாடம்: 19. உன் இறைவனைப் படைத்தவன் யார் என்று ஜைத்தான் கேட்டல்
ஹதீஸ் 54
அத்தியாயம் 1
பாடம் 19
(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ رضى الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ ". 54
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரிடம் ( அவர் மனத்திற்குள் ) ஷைத்தான் வந்து , “ இதைப் படைத்தவர் யார் ? இதைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்டுக்கொண்டே வந்து , இறுதியில் , “ உன் இறைவனைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்கின்றான் . இந்தக் ( கேள்வி கேட்கும் ) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும் . ( இத்தகைய சிந்தனையிலிருந்து ) விலகிக்கொள்ளட்டும் .
Reference: ( புகாரீ : 3276, முஸ்லிம் : 134) ( முஸ்லிம் : 212) மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளதாவது : ( இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் " நான் அல்லாஹ்வையும் ) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன் ` என்று கூறட்டும்