பாடம்: 17. இறைநம்பிக்கை, இஸ்லாம், உபகாரம் செய்தல்
(م) عن عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعَرِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الإِسْلاَمِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلاً . قَالَ صَدَقْتَ . قَالَ فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ . قَالَ فَأَخْبِرْنِي عَنِ الإِيمَانِ . قَالَ " أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ " . قَالَ صَدَقْتَ . 49
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் தந்தை உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் தெரிவித்தார்கள் : நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த , அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார் . பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை ; எங்களுள் எவருக்கும் அவரை ( யார் என ) த் தெரியவில்லை . அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் ( சென்று ), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு ( நெருக்கமாக ) அமர்ந்தார் . அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத் ( துப் பவ்வியமாக அமர்ந் ) தார் . பிறகு “ முஹம்மதே ! இஸ்லாம் ( அடிபணிதல் ) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இஸ்லாம் என்பது , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ( ஆகிய நான் ) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும் . மேலும் , தொழுகையைக் கடைப்பிடிப்பதும் , ஸகாத்தை வழங்கிவருவதும் , ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் , சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் " ஹஜ் ` செய்வதும் ஆகும் `` என்று பதிலளித்தார்கள் . அதற்கு அந்த மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு , அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . அடுத்து அவர் , “ ஈமான் ( இறைநம்பிக்கை ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கூறினார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும் ; நன்மை , தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும் `` என்று கூறினார்கள் . அதற்கும் அம்மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அடுத்து அம்மனிதர் , “ இஹ்ஸான் ( அழகிய முறையில் செயலாற்றல் ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இஹ்ஸான் என்பது ,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும் . ஏனெனில் , அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் , அவன் உங்களைப் பார்க்கின்றான் `` என்று பதிலளித்தார்கள் . அம்மனிதர் , “ மறுமை ( உலக அழிவு ) நாளைப் பற்றி ( அது எப்போது வரும் என ) எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கேள்வி கேட்கப்படுபவர் ( அதாவது நான் ), கேட்பவரைவிட ( அதாவது உங்களைவிட ) அதிகம் அறிந்தவர் அல்லர் . ( இது பற்றி எனக்கும் தெரியாது ; உங்களுக்கும் தெரியாது )`` என்று கூறினார்கள் . அம்மனிதர் , “ மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் !`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளரைப் பெற்றெடுப்பதும் , காலில் செருப்பில்லாத , அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும் `` என்று கூறினார்கள் . பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார் . நீண்ட நேரம் நான் ( அங்கேயே ) இருந்தேன் . பின்னர் என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உமரே ! கேள்வி கேட்ட அந்த மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று சொன்னேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்தாம் ( வானவர் ) ஜிப்ரீல் . உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் `` என்று சொன்னார்கள் .
عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا الْإِسْلَامُ قَالَ أَنْ يُسْلِمَ قَلْبُكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ وَأَنْ يَسْلَمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِكَ وَيَدِكَ قَالَ فَأَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ قَالَ وَمَا الْإِيمَانُ قَالَ تُؤْمِنُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ قَالَ فَأَيُّ الْإِيمَانِ أَفْضَلُ قَالَ الْهِجْرَةُ قَالَ فَمَا الْهِجْرَةُ قَالَ تَهْجُرُ السُّوءَ قَالَ فَأَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ قَالَ الْجِهَادُ قَالَ وَمَا الْجِهَادُ قَالَ أَنْ تُقَاتِلَ الْكُفَّارَ إِذَا لَقِيتَهُمْ قَالَ فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ عُقِرَ جَوَادُهُ وَأُهْرِيقَ دَمُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَمَلَانِ هُمَا أَفْضَلُ الْأَعْمَالِ إِلَّا مَنْ عَمِلَ بِمِثْلِهِمَا حَجَّةٌ مَبْرُورَةٌ أَوْ عُمْرَةٌ 50
அம்ர் பின் அபஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் என்றால் என்ன ?” என்று ஒரு மனிதர் கேட்டார் . “ உமது உள்ளம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்குப் பணிவதும் முஸ்லிம்கள் உமது நாவிலிருந்தும் கையிலிருந்தும் ( எந்த இடையூறுமின்றிப் ) பாதுகாப்புப் பெறுவதும் ஆகும் ” என்று விடையளித்தார்கள் . “ இஸ்லாமிய மார்க்கத்தில் எது சிறந்தது ?” என்று கேட்டார் . “ இறைநம்பிக்கை கொள்வது ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கை என்றால் என்ன ?” என்று கேட்டார் . அல்லாஹ்வையும் , அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மரணத்திற்குப் பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதையும் நீர் நம்புவதாகும் ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கையில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ நாடு துறந்து செல்லுதல் ( ஹிஜ்ரத் )” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “ தீமையை வெறுத்தல் ஆகும் ” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத்தில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “( அல்லாஹ்வின் பாதையில் ) அறப்போர் புரிதல் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “( போர்க்களத்தில் ) இறைமறுப்பாளர்களை எதிர்கொண்டால் அவர்களோடு போராடுவதாகும் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாதில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ அவனுடைய குதிரையின் பின்னங்கால் வெட்டப்பட்டு , அவனுடைய இரத்தம் ஓட்டப்படுவதாகும் ” என்று விடையளித்தார்கள் . ( பின்னர் ) அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் : பிறகு இரண்டு செயல்கள் உள்ளன . அவ்விரண்டும் மிகச் சிறந்த செயல்கள்-அவ்விரண்டைப்போன்று செய்தவரைத் தவிர . 1. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் , 2. அல்லது உம்ரா .