15- باب : حب النبي صلى الله عليه وسلم من الإيمان
பாடம் 15

பாடம்: 15. நபியை நேசிப்பது இறைநம்பிக்கையில் சேர்ந்ததாகும்

ஹதீஸ் 40 அத்தியாயம் 1 பாடம் 15

(ق) عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ 40

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவருக்குத் தம்முடைய தந்தை , தம்முடைய பிள்ளை , ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவராக ஆகாத வரை அவர் ( உண்மையான ) இறைநம்பிக்கை ( ஈமான் ) கொண்டவர் ஆகமாட்டார் .

Reference: ( புகாரீ : 15, முஸ்லிம் : 44)
ஹதீஸ் 41 அத்தியாயம் 1 பாடம் 15

(خ) عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ لَهُ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ كُلِّ شَىْءٍ إِلاَّ مِنْ نَفْسِي‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ ‏.‏ فَقَالَ لَهُ عُمَرُ فَإِنَّهُ الآنَ وَاللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ نَفْسِي‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ الآنَ يَا عُمَرُ. 41

அப்துல்லாஹ் பின் ஹிஜாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் . அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! உம்மைவிடவும் நானே உமக்கு மிகப் பிரியமானவனாக ஆகும் வரை ( நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது )`` என்று கூறினார்கள் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக ! என்னைவிடத் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்றார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இப்போதுதான் உமரே ! ( சரியாகச் சொன்னீர்கள் )`` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6632)
ஹதீஸ் 42 அத்தியாயம் 1 பாடம் 15

(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مِنْ أَشَدِّ أُمَّتِي لِي حُبًّا نَاسٌ يَكُونُونَ بَعْدِي يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ 42

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போருள் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார் .

Reference: ( முஸ்லிம் : 2832 / 5447)
ஹதீஸ் 43 அத்தியாயம் 1 பாடம் 15

عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أُحِبُّكُمْ أَهْلَ الْبَيْتِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " قَالَ اللَّهَ ، قَالَ : " فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا فَإِنَّ الْفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنَا مِنَ السَّيْلِ مِنْ أَعْلَى الْأَكَمَةِ إِلَى أَسْفَلِهَا " . 43

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அஹ்லுல் பைத்தாகிய தங்களை நான் நேசிக்கிறேன் ” என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வின்மீது சத்தியமாக ” என்று கூறினேன் . “ அப்படியெனில் ஏழ்மையை எதிர்கொள்ளத் தயாராக இரு . ஏனென்றால் வெள்ளம் மேலிருந்து கீழ்நோக்கி விரைவாகப் பாய்ந்தோடுவதைப்போல் எங்களை நேசிப்போருக்கு வறுமை மிக வேகமாக வந்துசேரும் ” என்றார்கள் .

Reference: ( ஹாகிம் : 7944) புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரின் நிபந்தனைப்படி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் அமைந்துள்ளது என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் . அடிக்குறிப்பு : இந்த ஹதீஹுக்கு விளக்கமாக திர்மிதீ (2398) நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸைக் காணலாம் . “ மக்களுள் மிகக் கடுமையான சோதனைக்கு ஆளாகக்கூடியவர்கள் நபிமார்கள் . பின்னர் அவர்களைப் போன்றவர்கள் , அவர்களைப் போன்றவர்கள் ” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .