பாடம்: 12.பொறுமையும் அது சார்ந்த நிலையும்
( ق) عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ» 32
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் ( உடனே தண்டித்துவிடாமல் ) மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை . மனிதர்கள் ( சிலர் ) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள் . அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான் .
حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلَابِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ "، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ "، قَالَ: " وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا، وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " 33
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அந்நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மனிதரின் ) எந்த உள்ளமும் ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே இல்லாமலில்லை . அவன் நாடினால் அதை நிலையாக நிற்கச் செய்கிறான் . அவன் நாடினால் அதை அசைத்து விடுகிறான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உள்ளங்களை நிலையாக வைப்பவனே , எங்களுடைய உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலையாக வைப்பாயாக ! தராசு ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய கையில் இருக்கிறது . அவன் மறுமை நாள் வரை சிலரை உயர்த்துகிறான் ; சிலரைத் தாழ்த்துகிறான் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ» 34
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் யாருமில்லை . அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான் . அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர் .
( ق) أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ اللَّهَ يَغَارُ، وَغَيْرَةُ اللَّهِ أَنْ يَأْتِيَ المُؤْمِنُ مَا حَرَّمَ اللَّهُ» 35
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் . அல்லாஹ்வின் ரோஷம் என்பது , அவன் தடைவிதித்துள்ள ஒன்றை ( தடையை மீறி ) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் .