பாடம்: 11. நிச்சயமாக அல்லாஹ் துயில்கொள்ள மாட்டான்
( م) عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ، فَقَالَ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ، وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ - وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ: النَّارُ - لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ 31
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் மத்தியில் நின்று ஐந்து விஜயங்களைச் சொன்னார்கள் . ( அவை :) 1) மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்க மாட்டான் ; உறங்குவது அவனுக்குத் தகாது . 2) அவன் தராசைத் தாழ்த்துகிறான் ; உயர்த்துகிறான் . 3) ( மனிதன் ) இரவில் புரிந்த செயல் , பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 4) ( மனிதன் ) பகலில் புரிந்த செயல் , இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 5) ஒளியே ( அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும் ) அவனது திரையாகும் . - மற்றோர் அறிவிப்பில் " நெருப்பே அவனது திரையாகும் ` என்று காணப்படுகிறது .- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும் .