10- باب : ادعونى أستجب لكم
பாடம் 10

பாடம்: 10. என்னை அழையுங்கள், நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்

ஹதீஸ் 30 அத்தியாயம் 1 பாடம் 10

(م) عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إِلَّا مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» 30

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே ! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன் . அதை உங்கள் மத்தியிலும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன் . ஆகவே , நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள் . என் அடியார்களே ! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே . ஆகவே , என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள் . உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே . ஆகவே , என்னிடமே வாழ்வாதாரத்தைக் கேளுங்கள் . நான் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே . ஆகவே , என்னிடமே ஆடை கேளுங்கள் . நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன் . என் அடியார்களே ! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள் . நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன் . ஆகவே , என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள் . நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது ; மேலும் , உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் ( தத்தம் தேவைகளைக் ) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன் . அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை ; கடலில் நுழை ( த்து எடு ) க்கப்பட்ட ஊசி ( தண்ணீரைக் ) குறைப்பதைப் போன்றே தவிர ( குறைக்காது )! என் அடியார்களே ! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன் . பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன் . நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும் ; அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும் !

Reference: ( முஸ்லிம் : 2577 / 5033)