9- باب : الرحمن الرحيم
பாடம் 9

பாடம்: 9. அர்ரஹ்மான் அர்ரஹீம்

ஹதீஸ் 24 அத்தியாயம் 1 பாடம் 9

(ق) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلْقُ، حَتَّى تَرْفَعَ الفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ» 24

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான் . அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான் . ( மீதமுள்ள ) ஒன்றையே பூமியில் இறக்கினான் . இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றுக்கொன்று பாசம் காட்டுகின்றன . எந்த அளவிற்கென்றால் , மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது .

Reference: ( புகாரீ : 6000, முஸ்லிம் : 2752) ( புகாரீ : 6469, முஸ்லிம் : 2755)
ஹதீஸ் 25 அத்தியாயம் 1 பாடம் 9

( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي» 25

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (" லவ்ஹுல் மஹ்ஃபூழ் ` என்னும் ) பதிவேட்டில் - அது அர்ஸுக்கு மேலே அவனிடம் உள்ளது - " என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது `` என்று எழுதினான் .

Reference: ( புகாரீ : 3194, முஸ்லிம் : 2751) “ என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது `` என்று புகாரீ , முஸ்லிம் ஆகிய இருவரின் மற்றோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது . ( புகாரீ : 7422, முஸ்லிம் : 2751)
ஹதீஸ் 26 அத்தியாயம் 1 பாடம் 9

(خ ) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةٍ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ وَهُوَ فِي الصَّلاَةِ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا، وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا. فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْأَعْرَابِيِّ: «لَقَدْ حَجَّرْتَ وَاسِعًا» يُرِيدُ رَحْمَةَ اللَّهِ 26

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் நின்றார்கள் . அவர்களுடன் நாங்களும் நின்றோம் . அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி , “ இறைவா ! எனக்கும் முஹம்மத் அவர்களுக்கும் ( மட்டும் ) அருள் புரிவாயாக ! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே !`` என்று பிரார்த்தனை செய்தார் . ( தொழுது முடித்து ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம் , “ விசாலமானதை , அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கிவிட்டாயே !` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 6010)
ஹதீஸ் 27 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَنَسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ وَصَبِيٌّ فِي الطَّرِيقِ، فَلَمَّا رَأَتْ أُمُّهُ الْقَوْمَ خَشِيَتْ عَلَى وَلَدِهَا أَنْ يُوطَأَ، فَأَقْبَلَتْ تَسْعَى وَتَقُولُ: ابْنِي ابْنِي وَسَعَتْ فَأَخَذَتْهُ، فَقَالَ الْقَوْمُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا كَانَتْ هَذِهِ لِتُلْقِيَ ابْنَهَا فِي النَّارِ. قَالَ: فَخَفَّضَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَلَاءُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يُلْقِي حَبِيبَهُ فِي النَّارِ» 27

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு தடவை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுள் ஒரு குழுவினரோடு நடந்து சென்றார்கள் . வழியில் ஒரு சிறுவன் இருந்தான் . மக்கள் நடந்து வருவதைக் கண்ட அச்சிறுவனின் தாய் , அவர்கள் தன் பிள்ளையை மிதித்துவிடுவார்களோ என்று அஞ்சினாள் . “ என் மகன் , என் மகன் ” என்று கூறியவாறே முன்னோக்கி ஓடிவந்தாள் . விரைந்து வந்து அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டாள் . அதைப் பார்த்த ( தோழர்களான ) மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! இவள் தன் மகனை நரகத்தில் போட்டுவிடமாட்டாள் அல்லவா ?” என்றார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் தம் தலையைத் தாழ்த்தியவாறு , “ மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வும் தன்னுடைய நேசரை நரகத்தில் போட்டுவிடமாட்டான் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 12018). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 28 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ: «لِلَّهِ عَزَّ وَجَلَّ مِائَةُ رَحْمَةٍ، وَإِنَّهُ قَسَمَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ أَهْلِ الْأَرْضِ، فَوَسِعَتْهُمْ إِلَى آجَالِهِمْ، وَذَخَرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً لِأَوْلِيَائِهِ، وَاللَّهُ عَزَّ وَجَلَّ قَابِضٌ تِلْكَ الرَّحْمَةَ الَّتِي قَسَمَهَا بَيْنَ أَهْلِ الْأَرْضِ إِلَى التِّسْعِ وَالتِّسْعِينَ فَيُكَمِّلُهَا مِائَةَ رَحْمَةٍ لِأَوْلِيَائِهِ يَوْمَ الْقِيَامَةِ» 28

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு நூறு ( மடங்கு ) அன்பு உண்டு . நிச்சயமாக அவன் ( அவற்றுள் ) ஒன்றை நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டான் . எனவே அது அவர்களின் மரணம் வரை விசாலமாகி ( ப் பெருகி ) விட்டது . அவன் தன் நேசர்களுக்காகத் தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்பை வைத்துக்கொண்டான் . மேலும் : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்த அந்த ( ஒரு மடங்கு ) அன்பை ( த் தன்னுடைய ) தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்போடு சேர்த்துக் கைப்பற்றிக்கொள்வான் . ஆக மறுமையில் அவன் தன் நேசர்களுக்காக நூறு ( மடங்கு ) அன்பை முழுமையாக வைத்துக்கொள்வான் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 10670, 10672). புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 29 அத்தியாயம் 1 பாடம் 9

عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ وَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةُ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ وَأَرْبَعًا وَعِشْرِينَ حَسَنَةً " قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا لَا يَهْلِكُ مِنَّا أَحَدٌ. قَالَ: «بَلَى إِنَّ أَحَدَكُمْ لَيَجِيءُ بِالْحَسَنَاتِ لَوْ وُضِعَتْ عَلَى جَبَلٍ أَثْقَلَتْهُ ثُمَّ تَجِيءُ النِّعَمُ فَتَذْهَبُ بِتِلْكَ ثُمَّ يَتَطَاوَلُ الرَّبُّ بَعْدَ ذَلِكَ بِرَحْمَتِهِ» 29

அபூதல்ஹா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று யார் சொல்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் . அவருக்குச் சொர்க்கம் ( கிடைப்பது ) கட்டாயமாகிவிடும் . சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ( அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன் ) என நூறு தடவை யார் சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஆயிரத்து இருபத்து நான்கு நன்மைகளை எழுதுகிறான் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அப்படியானால் எங்களுள் ஒருவர்கூட அழிந்துவிட மாட்டார் அல்லவா ?” என்று கேட்டார்கள் . அதற்கவர்கள் , “ ஆம் ! உங்களுள் ஒருவர் ( தம் ) நன்மைகளைக் கொண்டுவருவார் . அவை ஒரு மலைமீது வைக்கப்பட்டாலும் அது ( அவற்றின் பாரம் தாங்க முடியாமல் ) கனத்துவிடும் . பின்னர் ( அல்லாஹ் இவ்வுலகில் அவருக்கு வழங்கிய ) அருட்கொடைகள் வரும் . அது அவற்றை அகற்றிவிடும் . ( அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்மைகள் பகரமாகிவிடும் ) பின்னர் ரப்பாகிய இறைவன் தன்னுடைய அன்பால் ( அவர்கள் அனைவரையும் ) அரவணைத்துக்கொள்வான் .

Reference: ( ஹாகிம் : 7638). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .