பாடம்: 5. ஏகத்துவக் கொள்கையோடு யார் மரணித்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்
( ق) عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَانِي آتٍ مِنْ رَبِّي، فَأَخْبَرَنِي - أَوْ قَالَ: بَشَّرَنِي - أَنَّهُ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» 14
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் இரட்சகனிடமிருந்து ஒரு ( வான ) வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார் . அதாவது " என்னுடைய சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் " என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் , “ அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா ?`` எனக் கேட்டேன் . அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ - ஈடுபட்டிருந்தாலும்தான் `` என்று பதிலளித்தார்கள் .
( ق) حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُعاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ، قَالَ: «يَا مُعَاذَ بْنَ جَبَلٍ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثَلاَثًا، قَالَ: «مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، صِدْقًا مِنْ قَلْبِهِ، إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» ، قَالَ يَا رَسُولَ اللَّهِ: أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ: «إِذًا يَتَّكِلُوا» وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا 15
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு பயணத்தில் வாகனமொன்றில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தபோது , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ முஆத் பின் ஜபலே !`` என்று அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என்று முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . “ முஆதே !` என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என மீண்டும் முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . இவ்வாறு மூன்று முறை ( அழைப்பும் பதிலும் ) நடந்தது . பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்துவிட்டான் `` என்று கூறினார்கள் . உடனே முஆத் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ? ( இதைக் கேட்டு ) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே !`` என்று கேட்டார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) இவ்வாறு நீர் அறிவித்தால் ( அதைக் கேட்டுவிட்டு ) அவர்கள் ( இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல் ) அசட்டையாக இருந்து விடுவார்கள் `` என்று கூறினார்கள் . ( கல்வியை மறைத்த ) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தருவாயில் இந்த ஹதீஸை முஆத் ரளியல்லாஹு அன்ஹு ( மக்களுக்கு ) அறிவித்தார்கள் .
( ق) عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلَّا أَخِرَةُ الرَّحْلِ، فَقَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ، وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا» ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، فَقَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ» 16
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் ) இருந்துகொண்டிருந்தேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ( ஒட்டகச் ) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது . ( அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன் .) அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஆதே !`` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . பிறகு சிறிது தூரம் சென்றபின் , “ முஆதே `` என்று ( மீண்டும் ) அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . சிறிது தூரம் சென்றபின் ( மீண்டும் ) “ முஆதே !` என்றார்கள் . ( அப்போதும் ) நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று பதிலளித்தேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால் , அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும் . அவனுக்கு எதனையும் ( எவரையும் ) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும் `` என்றார்கள் . இன்னும் சிறிது தூரம் சென்றபின் “ முஆத் பின் ஜபலே `` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( சொல்லுங்கள் )`` என்று பதில் கூறினேன் . அவர்கள் , “ அவ்வாறு ( அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல் ) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இத்தகைய ) மக்களை அவன் ( மறுமையில் ) வேதனைப்படுத்தாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும் `` என்று சொன்னார்கள் .
(م ) حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ» 17
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , "( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் ; யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்று பதிலளித்தார்கள் .
عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللَّهَ، وَهُوَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَلَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، كَمَا لَوْ لَقِيَهُ وَهُوَ مُشْرِكٌ بِهِ دَخَلَ النَّارَ، وَلَمْ تَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ» 18
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ அவரோடு உள்ள பாவங்கள் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது . யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவரோடு உள்ள நன்மைகள் அவருக்கு எந்தப் பயனையும் தராது ”. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم يَقُولُ: (مَنْ لَقِيَ اللهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً، يُصَلِّي الخَمْسَ، وَيَصُومُ رَمَضَانَ، غُفِرَ لَهُ) ، قُلْتُ: أَفَلاَ أُبَشِّرُهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: (دَعْهُمْ يَعْمَلُوا). 19
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ , ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றி , ரமளானில் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு ( அவருடைய பாவங்கள் ) மன்னிக்கப்படுகின்றன ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) அவர்களை விட்டுவிடுவீராக . ( இது தெரியாமல் இருந்தால்தான் ) அவர்கள் நல்லறங்கள் செய்வார்கள் `` என்று கூறினார்கள் .