பாடம்: 1. இஸ்லாம், இறைநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படைகள்
( ق) عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ 1
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இஸ்லாம் ஐந்து அம்சங்கள்மீது நிறுவப்பட்டுள்ளது . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது . 2. தொழுகையை நிலைநிறுத்துவது . 3. ( கடமையானோர் ) ஸகாத் வழங்குவது . 4. ( இயன்றோர் இறையில்லம் கஅபாவில் ) ஹஜ் செய்வது . 5. ரமளானில் நோன்பு நோற்பது .
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَ عَظِيمًا، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ» ثُمَّ قَالَ: " أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ النَّارَ الْمَاءُ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ، ثُمَّ قَرَأَ {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} [السجدة: 16] حَتَّى بَلَغَ {جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17] " ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ، وَعَمُودِهِ، وَذُرْوَةِ سَنَامِهِ؟ الْجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» قُلْتُ: بَلَى، فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «تَكُفُّ عَلَيْكَ هَذَا» قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يُكِبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟» 2
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( தபூக் போர் ) பயணத்தில் இருந்தேன் . ஒரு நாள் காலைப்பொழுதில் நாங்கள் பயணம் மேற்கொண்டிருந்தபோது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் இருந்தேன் . அப்போது நான் ( நபியவர்களிடம் ) " அல்லாஹ்வின் தூதரே ! என்னைச் சொர்க்கத்தில் நுழையச் செய்து , நரகத்திலிருந்து அப்புறப்படுத்தும் நற்செயல் ஒன்றை என்னிடம் தெரிவியுங்கள் !" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " நீ ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறாய் . அது அல்லாஹ் எளிதாக்கி வைத்தவருக்கு நிச்சயமாக எளிதானது ஆகும் . ( அது யாதெனில் ,) நீ அல்லாஹ்வையே வழிபட வேண்டும் ; அவனுக்கு எதையும் இணையாக ஆக்கக் கூடாது ; தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் ; ( ரமளானில் ) நோன்பு நோற்க வேண்டும் ; ( இயன்றால் ) இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்யவேண்டும் " என்று கூறிவிட்டு , " நன்மைகளின் வாசல்களைப் பற்றி உனக்கு அறிவிக்கட்டுமா ?" என்று கூறிவிட்டு , நோன்பு ( பாவங்களிலிருந்து காக்கின்ற ) கேடயமாகும் . தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம் செய்தல் குற்றங்களை அணைத்துவிடும் . ஒரு மனிதர் நடுநிசி நேரத்தில் ( இரவுத் தொழுகை ) தொழுவதும் ( இவ்வாறு குற்றங்களை அணைத்துவிடக்கூடியதுதான் )" என்று கூறினார்கள் . பிறகு " அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்தனை செய்ய அவர்களின் விலாப்புறங்கள் படுக்கையிலிருந்து விலகும் " ( எனும் 32:16-17) ஆகிய வசனங்களை முழுமையாக ஓதிக் காட்டினார்கள் . பிறகு " உனக்கு நான் அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகவும் தூணாகவும் திமிலாகவும் ( உயர்ந்த பகுதியாகவும் ) திகழக்கூடியவற்றைப் பற்றிக் கூறட்டுமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( கூறுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று சொன்னேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அனைத்துச் செயல்களுக்கும் தலையாயது இஸ்லாம் ஆகும் . இஸ்லாத்தின் தூண் ( போன்றது ) தொழுகையாகும் . இஸ்லாத்தின் திமிலாகத் திகழ்வது அறப்போராகும் " என்று கூறினார்கள் . பிறகு " ஒட்டுமொத்தமாக இவை அனைத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய அடிப்படையை உனக்கு நான் அறிவிக்க வேண்டாமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( அறிவியுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று கூறினேன் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது நாவைப் பிடித்துக்கொண்டு , " இதை ( அவசியமற்ற பேச்சுகளிலிருந்து ) தடுத்து ( பாதுகாத்து ) க்கொள் !" என்று கூறினார்கள் . அப்போது நான் , " அல்லாஹ்வின் நபியே ! நாங்கள் பேசுகின்ற பேச்சுகளால் தண்டிக்கப்படுவோமா ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " முஆதே ! உன்னை உன் தாய் இழக்கட்டும் ! மக்களை அவர்களது நாவுகள் அறுவடை செய்கின்றவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களது முகங்கள் மீது அல்லது மூக்குகள் மீது ( முகங்குப்புற ) விழச் செய்கின்றனவா ?" என்று மறுவினாத் தொடுத்தார்கள் .
عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ» 3
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் , “ ஈமான் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “ நீ செய்கின்ற நன்மை உன்னை மகிழ்வித்து , நீ செய்கின்ற தீமை உன்னைத் துன்புறுத்தினால் நீ முஃமின் ( இறைநம்பிக்கையாளன் ) ஆவாய் ” என்று பதிலளித்தார்கள் . “ பாவம் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “( எதையேனும் ஒன்றைச் செய்கின்றபோது ) உன் உள்ளத்தில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டால் ( அதுதான் பாவம் எனவே ) அதை விட்டுவிடு ” என்றார்கள் .