பாடம்: 25. (குர்ஆனின்) சிறிய அத்தியாயங்களின் கடைசியில் தக்பிர் கூறுதல்
عَنْ عِكْرِمَةَ بْنَ سُلَيْمَانَ ، يَقُولُ : قَرَأْتُ عَلَى إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسْطَنْطِينَ ، فَلَمَّا بَلَغْتُ وَالضُّحَى ، قَالَ لِي : " كَبِّرْ كَبِّرْ عِنْدَ خَاتِمَةِ كُلِّ سُورَةٍ ، حَتَّى تَخَتِمَ " وَأَخْبَرَهُ عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ أَنَّهُ قَرَأَ عَلَى مُجَاهِدٍ فَأَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ مُجَاهِدٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ ابْنُ عَبَّاسٍ أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ أَمَرَهُ بِذَلِكَ وَأَخْبَرَهُ أُبَيُّ بْنُ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أَمَرَهُ بِذَلِكَ . 523
இக்ரிமா பின் சுலைமான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ( குர்ஆனை முழுவதுமாக ) இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் பின் கிஸ்த்தன்தீன் அவர்களிடம் ஓதிக்காட்டினேன் . நான் வள்ளுஹா அத்தியாயத்தை அடைந்தபோது , அவர்கள் என்னிடம் , “( இதன்பிறகு ) ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் ( அதன் ) கடைசி ( அத்தியாயம் ) வரை தக்பீர் கூறுவீராக ” என்று சொன்னார்கள் . இச்செய்தியை அவருக்கு அப்துல்லாஹ் பின் கஸீர் ரஹிமஹுல்லாஹ் அறிவித்தார்கள் . அவர்கள் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்காட்டியபோது , அதனை அவருக்குக் கட்டளையிட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அவ்வாறு கட்டளையிட்டதாக முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் . உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் .