பாடம்: 17. குர்ஆனைக் குறிப்பிட்ட அளவாகப் பிரித்தல்
عَنْ ابْنِ الْهَادِ قَالَ سَأَلَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ فَقَالَ لِي فِي كَمْ تَقْرَأُ الْقُرْآنَ ؟ فَقُلْتُ : مَا أُحَزِّبُهُ فَقَالَ لِي نَافِعٌ لَا تَقُلْ مَا أُحَزِّبُهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَرَأْتُ جُزْءًا مِنْ الْقُرْآنِ قَالَ حَسِبْتُ أَنَّهُ ذَكَرَهُ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . 502
யஸீத் பின் அப்தில்லாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் அவர்கள் என்னிடம் , “ நீங்கள் எத்தனை நாள்களில் குர்ஆனை ( முழுமையாக ) ஓதுவீர்கள் ” என்று கேட்டார்கள் . “ நான் குறிப்பிட்ட அளவை வழமையாக்கி ஓதுவதில்லை ” என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் “ குறிப்பிட்ட ‘ அளவை ( ஹிஸ்பு ) வழமையாக்கி ஓதுவதில்லை ’ என்று கூறாதீர்கள் . ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் குர்ஆனில் ஒரு ( குறிப்பிட்ட ) பகுதியை ( ஜுஸ்வு ) ஓதினேன் என்று கூறியிருக்கிறார்கள் ” எனச் சொன்னார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ شَيْئًا ، فَلَمَّا أَصْبَحَ قِيلَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ يَتَبَيَّنُ ، قَالَ : إِنِّي إِنَّمَا عَلَى مَا تَرَوْنَ بِحَمْدِ اللَّهِ ، قَدْ قَرَأْتُ السَّبْعَ الطِّوَالَ . 503
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் இரவு சிறிதளவு வலியை உணர்ந்தார்கள் . காலையில் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுக்கு வலி மிகவும் வெளிப்படையானதுதான் ” என்று சொல்லப்பட்டது . அதற்கு அவர்கள் , “ அறிந்து கொள்க ! நீங்கள் பார்ப்பதைப் போன்று ( சாதாரணமானவன் ) தான் நான் . அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . ( அந்த வலியோடு ) நேற்றிரவு நீண்ட நெடிய ஏழு அத்தியாயங்களை ஓதியிருக்கிறேன் ” என்றார்கள் .