13-باب : فضل القرآن
பாடம் 13

பாடம்: 13. குர்ஆனின் சிறப்பு

ஹதீஸ் 489 அத்தியாயம் 10 பாடம் 13

عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّتَكَ سَتُفْتَتَنُ مِنْ بَعْدِكَ قَالَ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سُئِلَ مَا الْمَخْرَجُ مِنْهَا قَالَ الْكِتَابُ الْعَزِيزُ الَّذِي لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ مَنْ ابْتَغَى الْهُدَى فِي غَيْرِهِ أَضَلَّهُ اللَّهُ وَمَنْ وَلِيَ هَذَا الْأَمْرَ مِنْ جَبَّارٍ فَحَكَمَ بِغَيْرِهِ قَصَمَهُ اللَّهُ هُوَ الذِّكْرُ الْحَكِيمُ وَالنُّورُ الْمُبِينُ وَالصِّرَاطُ الْمُسْتَقِيمُ فِيهِ خَبَرُ مَنْ قَبْلَكُمْ وَنَبَأُ مَا بَعْدَكُمْ وَحُكْمُ مَا بَيْنَكُمْ وَهُوَ الْفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ وَهُوَ الَّذِي سَمِعَتْهُ الْجِنُّ فَلَمْ تَتَنَاهَى أَنْ قَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ وَلَا يَخْلَقُ عَنْ كَثْرَةِ الرَّدِّ وَلَا تَنْقَضِي عِبَرُهُ وَلَا تَفْنَى عَجَائِبُهُ . 489

அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹாரிஸ் அல்அஃவர் கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுடைய சமுதாயம் உங்களுக்குப் பிறகு சோதனைக்கு உள்ளாக்கப்படுமா ? என்று கேட்கப்பட்டது . ( அதற்கு அவர்கள் ஆம் என்றதும் ) உடனே நான் , " அதிலிருந்து விடுபட வழி என்ன ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் வேதம் ( குர்ஆனைக் கடைப்பிடிப்பதுதான் வழி ). ‘ இதற்கு முன்னும் சரி , இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் ( திருக்குர்ஆனாகிய ) இதனை ( அணுகவே ) அணுகாது . மிக்க புகழும் ஞானமும் உடையவனால் ( இது ) இறக்கப்பட்டது .’ (41: 42) என்று அல்லாஹ் கூறுகின்றான் . அதை விட்டுவிட்டு மற்றவற்றில் யார் நல்வழியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிடுவான் . அதை யார் அகம்பாவத்துடன் புறக்கணித்துச் சென்று , அது அல்லாத மற்றதைக் கொண்டு தீர்ப்பளித்தாரோ அவரை ( அவரது கழுத்தை ) அல்லாஹ் முறித்துவிடுவான் . அதுதான் ஞானமிக்க அறிவுரை ; தெளிவான ஒளி ; நேரிய வழி . அதில் உங்களுக்கு முந்தையவர்கள் பற்றிய வரலாறும் , உங்களுக்குப் பின்னால் நிகழவிருப்பது பற்றிய செய்தியும் , உங்கள் மத்தியில் நிகழும் விவகாரங்களுக்குத் தீர்ப்புகளும் உள்ளன . அதுதான் ( சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்துக்காட்டும் ) தெளிவாகும் ; அது கேலிக்குரியதன்று . அதைச் செவியுற்ற ஜின்களைக்கூட , ` நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் . அது நேர்வழியைக் காட்டுகிறது ` (72:1-2) என்று இறுதியில் கூறவைத்தது . ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்ப அதைக் கையாண்டாலும் அது இற்றுப் போய்விடாது . அதன் படிப்பினைகள் முடிவுறா ; அதன் ஆச்சரியங்கள் முற்றுப் பெறா . பிறகு அலீ ரளியல்லாஹு அன்ஹு ஹாரிஸிடம் , " அஃவரே ! இந்த அறிவுரையைப் பெற்று உம்மிடம் ( மனனமாக ) வைத்துக்கொள் " என்றார்கள் .

Reference: ( தாரிமீ : 3375) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 490 அத்தியாயம் 10 பாடம் 13

عَنْ كَعْبٍ قَالَ عَلَيْكُمْ بِالْقُرْآنِ فَإِنَّهُ فَهْمُ الْعَقْلِ وَنُورُ الْحِكْمَةِ وَيَنَابِيعُ الْعِلْمِ وَأَحْدَثُ الْكُتُبِ بِالرَّحْمَنِ عَهْدًا وَقَالَ فِي التَّوْرَاةِ يَا مُحَمَّدُ إِنِّي مُنَزِّلٌ عَلَيْكَ تَوْرَاةً حَدِيثَةً تَفْتَحُ فِيهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا . 490

கஅபுல் அஹ்பார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைப் பற்றிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் அது அறிவின் விளக்கம் ; ஞானத்தின் ஒளி ; கல்வியின் ஊற்றுகள் . ரஹ்மானாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் புதியது . அல்லாஹ் தவ்ராத்தில் சொல்லியுள்ளான் : முஹம்மதே ! நிச்சயமாக நான் உமக்கு புதியதொரு தவ்ராத்தை இறக்கியருளப்போகின்றேன் . அது குருட்டுக் கண்களையும் செவிட்டுக் காதுகளையும் திரையிடப்பெற்ற உள்ளங்களையும் திறக்கும் .

Reference: ( தாரிமீ : 3370) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 491 அத்தியாயம் 10 பாடம் 13

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِنَّ هَذَا الْقُرْآنَ مَأْدُبَةُ اللَّهِ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ فَإِنِّي لَا أَعْلَمُ شَيْئًا أَصْفَرَ مِنْ خَيْرٍ مِنْ بَيْتٍ لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ وَإِنَّ الْقَلْبَ الَّذِي لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ خَرِبٌ كَخَرَابِ الْبَيْتِ الَّذِي لَا سَاكِنَ لَهُ . 491

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வுடைய விருந்தாகும் . எனவே அதிலிருந்து உங்களால் இயன்ற வரை எடுத்துக்கொள்ளுங்கள் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத வீட்டைவிட நன்மை அறவே இல்லாத எதையும் நான் அறியேன் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத உள்ளம் , குடியிருப்பவர் யாருமில்லாத பாழடைந்த வீட்டைப் போன்றதாகும் .

Reference: ( தாரிமீ : 3350) இதன் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள் .
ஹதீஸ் 492 அத்தியாயம் 10 பாடம் 13

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدَرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لَا يُوحَى إِلَيْهِ ، لَا يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَحِدَّ مَعَ مَنْ حَدَّ ، وَلَا يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلَامُ اللَّهِ تَعَالَ . 492

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் குர்ஆனை ஓதினாரோ அவர் நபித்துவத்தைத் தம் இரு புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டுவிட்டார் ( என்று பொருள் ). எனினும் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதில்லை . குர்ஆனை உடையவர் ( மனனம் செய்தவர் ) தம்முடன் கோபப்படுபவர் மீது கோபப்படக்கூடாது . தம்மோடு அறிவற்ற நிலையில் நடந்து கொள்பவரோடு அறிவற்ற நிலையில் நடந்துகொள்ளக்கூடாது . ( ஏனென்றால் ) அவருடைய உள்ளத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) உள்ளது .

Reference: ( ஹாகிம் : 2028) இது ‘ ஸஹீஹ் ’ தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .