பாடம்: 11. அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்
(م) عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ . 487
ஆமிர் பின் வாஸிலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு , ( கலீஃபா ) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள் . ( இக்காலக் கட்டத்தில் ) உமர் ரளியல்லாஹு அன்ஹு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு ( நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ) “ நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு ( மக்கா ) வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “( அப்துர் ரஹ்மான் ) இப்னு அப்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை `` என்று பதிலளித்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்னு அப்ஸா யார் ?`` எனக் கேட்டார்கள் . நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் ( முன்னாள் ) அடிமைகளுள் ஒருவர் `` எனப் பதிலளித்தார்கள் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் (- இப்னு அப்ஸா ) இறை வேதத்தை அறிந்தவர் ; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர் `` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உமர் ரளியல்லாஹு அன்ஹு “ அறிந்துகொள்க ! அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான் ; வேறு சிலரைத் தாழ்த்துகிறான் `` என்று உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் . ( இப்னு அப்ஸா வேத அறிவால் மேன்மை பெற்றுவிட்டார் )`` என்று சொன்னார்கள் .