7-باب : ( اقرؤوا القرآن ما ائتلفت عليه قلوبكم )
பாடம் 7

பாடம்: 7. உங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்

ஹதீஸ் 482 அத்தியாயம் 10 பாடம் 7

(ق) عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ . 482

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள் . ( அதன் கருத்தை அறிவதில் ) உங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தால் அ( ந்த இடத் ) தைவிட்டு எழுந்து ( சென்று ) விடுங்கள் .

Reference: ( புகாரீ : 5060, முஸ்லிம் : 2667)
ஹதீஸ் 483 அத்தியாயம் 10 பாடம் 7

(خ) عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَجُلًا قَرَأَ آيَةً وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ خِلَافَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا . 483

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன் . அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓத நான் கேட்டிருந்தேன் . ஆகவே , அவரை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன் . அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி ( யின் சாயல் ) படிந்திருப்பதை உணர்ந்தேன் . அவர்கள் , “ நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் . ( எல்லா விஷயங்களிலும் ) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் . ஏனெனில் , உங்களுக்கு முன்னிருந்தவர்கள் ( ஒவ்வொரு விஷயத்திலும் ) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்து போனார்கள் `` என்று சொன்னார்கள்

Reference: ( புகாரீ : 3476)