5-باب : ترتيل القرآن واجتناب الهذ
பாடம் 5

பாடம்: 5. திருக்குர்ஆனை நிறுத்தி ஓதுதல், மிக வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல்

ஹதீஸ் 472 அத்தியாயம் 10 பாடம் 5

(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ فَقَالَ قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ؟! لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنْ الْمُفَصَّلِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ . 472

அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து , “ நான் நேற்றிரவு " அல்முஃபஸ்ஸல் ` அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன் `` என்று கூறினார் . அதற்கு இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த ஒத்த ( பொருள் கொண்ட ) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் `` என்று கூறிவிட்டு , அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள் .

Reference: ( புகாரீ : 775, முஸ்லிம் : 822)
ஹதீஸ் 473 அத்தியாயம் 10 பாடம் 5

عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ أُرَاهَا حَفْصَةَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّكُمْ لَا تَسْتَطِيعُونَهَا قَالَ فَقِيلَ لَهَا أَخْبِرِينَا بِهَا قَالَ فَقَرَأَتْ قِرَاءَةً تَرَسَّلَتْ فِيهَا قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ فَحَكَى لَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ قَطَّعَ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ قَطَّعَ مَالِكِ يَوْمِ الدِّينِ . 473

இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியருள் ஒருவரிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக அபூஆமிர் ரஹிமஹுல்லாஹ் சொன்னார் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( தொழுகையில் குர்ஆன் ) ஓதிய விதம் குறித்து ( அவர்களின் துணைவியார் ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வினவப்பட்டபோது , “ அ( வ்வாறு ஓதுவ ) து உங்களால் இயலாது ” எனக் கூறினார்கள் . “ அதை நீங்கள் எங்களுக்கு அறிவியுங்கள் ” என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது . அப்போது அவர்கள் , நிறுத்தி நிதானமாக ஓதிக்காட்டினார்கள் . இப்னு அபீமுலைகா எங்களுக்குக் கூறியதாக நாஃபி கூறினார் என்று அபூஆமிர் சொன்னதாவது : அல்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ( ஓதி ) நிறுத்தினார் . அர்ரஹ்மான் னிர்ரஹீம் என்று ( ஓதி ) நிறுத்தினார் . பிறகு மாலிகி யவ்மித்தீன் என்று ஓதி ( நிறுத்தி ) னார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 25930) இதன் அறிவிப்பாளர்கள் புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவர் .